மகாராஷ்டிரத்தில் இருந்து பிகார் வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரம் உள்பட நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் புதிய கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிகார் முதல்வர் இன்று வெளியிட்ட செய்தியில்,
கரோனா பரவல் காரணமாக பிகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து திரும்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றோம். மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ரயில் மூலம் பிகார் வருபவர்களுக்கு ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.