மகாராஷ்டிரத்தில் குரூப் தேர்வுகள் ஒத்திவைப்பு

ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவிருந்த மகாராஷ்டிர அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவிருந்த மகாராஷ்டிர அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பரவி வரும் கரோனா இரண்டாம் அலையில் அதிகபட்ச பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் பதிவாகி வருகின்றது.

இதையடுத்து, மகாராஷ்டிரத்தில் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவிருந்த மகாராஷ்டிர அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com