தமிழகத்தில் புதிதாக 5,989 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,26,816ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 1977, செங்கல்பட்டில் 615, கோவையில் 501, திருவள்ளூரில் 212, காஞ்சிபுரம் 181, திருப்பூரில் 154 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 23 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,886ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,952 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,76,257 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 37,673 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 83,895 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இதே நாளில் 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.