மேற்கு வங்க துப்பாக்கிச் சூடு: மம்தா தலைமையில் நாளை(ஏப்.11) பேரணி

வாக்காளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நாளை(ஏப்.11) முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வாக்காளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து நாளை(ஏப்.11) முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கூச்பிகார் மாவட்டத்தில் சிதல்குச்சி பகுதியில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்தபோது நடந்த தகராறில் 4 வாக்காளர்களை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டை கண்டித்து முதல்வர் மம்தா தலைமையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) கூச்பிகாரில் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com