கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் கடந்த மார்ச் 27ஆம் தேதி முதல் மேற்கு வங்க தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.
நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், மாநில கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சய் பாஷு வெளியிட்டுள்ள செய்தியில்,
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் பிரசாரம் மற்றும் பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளுவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.