நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், துணை முதல்வர்கள் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் மருத்துவமனையில் இன்று கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்கள்.
நாட்டில் இதுவரை 11.41 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.