வாக்குப் பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு எடுத்து செல்லும் அலுவலர்கள்
வாக்குப் பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு எடுத்து செல்லும் அலுவலர்கள்

மேற்கு வங்கத்தில் நாளை(ஏப்.17) 5-ம் கட்டத் தேர்தல்

மேற்கு வங்க மாநிலத்தில் நாளை(ஏப்.17) ஐந்தாம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.


கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நாளை(ஏப்.17) ஐந்தாம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் 45 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெறுகிறது.

ஐந்தாம் கட்டத் தோ்தலில், மொத்தம் 39 பெண் வேட்பாளர்கள் உள்பட 319 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 

6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த 4ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானதையடுத்து, 1,071 கம்பெனி படைகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் நடைபெறும் மையங்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்களை பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 10, 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com