தற்போதைய செய்திகள்
தமிழகத்தில் 9 ஆயிரத்தை கடந்தது கரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 9,344 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 9,344 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,80,728ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 2,884 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 39 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 13,071ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 5,263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,02,022 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 65,635 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.