அதிகரித்து வரும் கரோனா குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்றிரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பல்வேறு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
இக்கூட்டத்தில், அதிகரிக்கும் கரோனா மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து ஆலோசிக்க உள்ளனர்.