தமிழகத்தில் மதுக்கடைகள் வார நாள்களில் இரவு 9 மணிவரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை நாள்தோறும் வேகமாக பரவி வருவதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து இன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் வார நாள்களில் இரவு 9 மணிவரை மட்டுமே செயல்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.