அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
கரோனாவால் உலகளவில் அதிக பாதிப்பை பதிவு செய்த நாடாக அமெரிக்கா உள்ளது. இதையடுத்து, அந்நாட்டு மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,
தற்போது, நாடு முழுவதும் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது.