‘குஜராத்தில் ஊரடங்கிற்கு அவசியமில்லை’: முதல்வர்

குஜராத் மாநிலத்தில் தற்போதைக்கு ஊரடங்கிற்கு அவசியமில்லை என முதல்வர் விஜய் ரூபானி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி (கோப்புப்படம்)
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி (கோப்புப்படம்)

குஜராத் மாநிலத்தில் தற்போதைக்கு ஊரடங்கிற்கு அவசியமில்லை என முதல்வர் விஜய் ரூபானி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதையொட்டி, பல மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றனர்.

குஜராத்தில் நாள்தோறும் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்படுவதால் புதிய கட்டுப்பாடுகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் விஜய் ரூபானி கூறியது,

தற்போது 20 நகரங்களில் இரவுநேர ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள், வணிக வளாகங்கள் போன்றவைக்கு பல கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் ஊரடங்கு விதிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் மேலும் 10 ஆயிரம் படுக்கைகள் உருவாக்கப்படும். ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com