புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு

புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கத்தை அறிவித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம்: துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு
புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கம்: துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவிப்பு

புதுச்சேரியில் வார இறுதி நாள்களில் பொதுமுடக்கத்தை அறிவித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமை முழு பொதுமுடக்கத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 2 மணிவரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மதியம் 2 மணி வரை மட்டுமே உணவு விடுதிகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் 2 மணிக்கு மேல் பார்சல் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து வழிபாட்டு தலங்களில் ஊர்வலங்கள், தேரோட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com