புதுச்சேரி மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், புதுச்சேரி மத்திய சிறை கைதிகளுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
41 கைதிகள் மற்றும் 3 வார்டன்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த பிற கைதிகள், வார்டன்களையும் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.