தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.26ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
அதன்படி, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களில் குறைந்தது 50 சதவீத பேரை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.