தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமாருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.