கரோனாவிலிருந்து மீண்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் இன்று வீடு திரும்பினார்.
88 வயதான அவருக்கு ஏப். 19ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மன்மோகன் சிங் தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்கு பின் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அவர் இன்று வீடு திரும்பினார்.