கேரளத்தில் மே 4 முதல் கடுமையான கட்டுப்பாடுகள்: முதல்வர்

கேரளத்தில் மே 4 முதல் 9ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன்
முதல்வர் பினராயி விஜயன்

கேரளத்தில் மே 4 முதல் 9ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலை கேரளத்தில் வேகமாக பரவி வரும் சூழலில் நாள்தோறும் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மே 4 முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பினராயி விஜயன் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில்,

மே 4 முதல் 9ஆம் தேதி வரை கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவுள்ளது. முறையான வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும். ஆக்ஸிஜன், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் கொண்டு செல்வதற்கு இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com