மக்களவையில் தொடர் அமளி: மாலை 5 மணி வரை ஒத்திவைப்பு
By ANI | Published On : 08th February 2021 04:22 PM | Last Updated : 08th February 2021 04:24 PM | அ+அ அ- |

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மாலை 5 மணி வரை அவையை ஒத்திவைத்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
பட்ஜெட் பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற தொடர்ந்து நடைபெற்று வரும் அமளியால் இன்று(பிப்.8) வரை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் வெள்ளிக்கிழமை(பிப்.5) அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் மக்களவை கூடிய சிறிது நேரத்தில், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மக்களவையை மாலை 5 மணி வரை ஒத்திவைத்து பேரவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.