விழுப்புரம் அருகே மின்கசிவினால் 10 வீடுகளில் பரவிய தீயால் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளது.
விழுப்புரம் அடுத்துள்ள தும்பூர் தாங்கல் கிராமத்தில் அஞ்சுலட்சுமி என்பவர் வீட்டில் செய்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
காற்று அடித்ததால் பக்கத்தில் உள்ள குமார், சங்கர், சுப்பிரமணி, கோவிந்தராஜன் உள்ளிட்ட பத்து வீடுகளில் தீ பரவி அனைத்து வீடுகளில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தீயில் கருகி நாசமானது.
இதில், 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தகவலறிந்து விழுப்புரம் தீயணைப்புத்துறையினர் மற்றும் கெடார் போலீசார் வருவதற்கு முன்னதாக வீட்டில் உள்ள அனைத்தும் பொருட்களும் சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. கெடார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.