குஜராத் மாநிலத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் சிங்கம் உலா வரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஜுனகத் நகரில் உள்ள விடுதி ஒன்றில் திங்கள்கிழமை காலை 5 மணியளவில் சிங்கம் ஒன்று நுழைந்துள்ளது. விடுதிக்குள் நுழைந்த சிங்கம் வாகன நிறுத்துமிடம் மற்றும் விடுதி வளாகங்களில் சுற்றித்திரிந்த பின் கதவு ஏறி குதித்து வெளியே சென்றுள்ளது.
இந்நிலையில், அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.