குறைவான நேரத்தில் அதிக பேருக்கு தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதுகுறித்து ஹர்ஷ் வர்தன் கூறியதாவது,
இந்தியாவில் வெறும் 26 நாள்களில் 70 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வேகமாக தடுப்பூசி செலுத்தும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என தெரிவித்தார்.