தமிழகத்தில் இதுவரை 2.27 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,
தமிழகத்தில் இன்று முன்களப் பணியாளர்கள் உள்பட 15,856 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதையடுத்து, 27 நாள்களில் மொத்தம் 2,27,340 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.