ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் தங்தார் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் இந்திய நிலைகள் மீது போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்து வருவதாகவும், மேலும் இந்திய தரப்பில் இதுவரை எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.