மேற்குவங்க மக்களை கடந்த 10 ஆண்டுகளாக மம்தா அரசு முட்டாளாக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தம்லக் பகுதியில் தர்மேந்திர பிரதான் கூறியதாவது,
திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள். மேற்குவங்கத்தில் மாற்றத்திற்கான அலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் முட்டாளாக்கப்பட்டுள்ளனர்.
இந்த முறை மக்கள் திரிணமூல் அரசிற்கு எதிராக வாக்குகளை பதிவு செய்வார்கள். பின், மேற்குவங்கம் சொர்க்க வங்கமாக மாறும் எனத் தெரிவித்துள்ளார்.