கரோனா நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பல விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது. அதன்பின், நோய்த் தொற்றுக்கு ஏற்ப தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தது.
ஒடிசா மாநிலத்தில் தற்போது நாள்தோறும் 100க்கும் குறைவான மக்களுக்கு தான் நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மக்கள் கரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.