ஹரியாணா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்லூரிகளில் நடக்கும் தவறுகளை கண்டறிய வளாகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துமாறு ஹரியாணா மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஹரியாணா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ஹரியாணா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளின் வளாகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். இதுவரை பொருத்தாத கல்லூரிகள், விரைவில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி, வளாகங்களை திறம்பட கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.