இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சுனீத் சர்மா பதவியேற்றார்.
ரயில்வே வாரியத்தின் தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சுனீத் சர்மாவை நியமனம் செய்வதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தனர்.
இதனையடுத்து, வெள்ளிக்கிழமை சுனீத் சர்மா பதவியேற்றார்.
இதற்கு முன், சுனீத் சர்மா கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளராக பணியாற்றியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய ரயில்வேவின் பல துறைகளில் பணிபுரிந்துள்ளார்.
மும்பையில் பரேல் பட்டறை தலைமை பணிமனை மேலாளராக இருந்தபோது, மலை ரயில்களுக்கு குறுகிய பாதை என்ஜின்களை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.