அறிவியல் நகர துணைத் தலைவராக பதவி வகித்த சகாயம் விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்த சகாயம் ஓய்வு பெற இன்னமும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், தனது 57வது வயதில் விருப்ப ஓய்வு கேட்டு அக்டோபர் 2ஆம் தேதி தமிழக அரசிடம் அவா் கடிதம் அளித்திருந்தாா்.
இதையடுத்து, அவரின் கடிதத்தை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அவரை பணியிலிருந்து விடுவித்து புதன்கிழமை அறிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையின் முதன்மை செயலாளராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் லக்கானிக்கு கூடுதல் பொறுப்பாக அறிவியல் நகர துணைத் தலைவராக பதவியை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.