தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாமக்கல்லில் 1,008 திருவிளக்கு பூஜை

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் கோமாதா பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
1008 திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.
1008 திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

நாமக்கல்: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் 1008 திருவிளக்கு பூஜை மற்றும் கோமாதா பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் பிற்பகல் 7 மணியளவில் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள், சிறுமியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் ஈஸ்வரன் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், நாமக்கல் மக்கள் தொகை தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com