தில்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் வியாழக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.
சப்தர்ஜங் மருத்துவமனையின் நான்காவது மாடியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மின் கசிவால தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், உயிர்சேதம் அல்லது காயம் குறித்த தகவல் வெளியாகவில்லை.