உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் (எஸ்சிபிஏ) தலைவரும் மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தவே தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், பார் அசோசியேஷன் தலைவராகவும் இருப்பவர் துஷ்யந்த் தவே.
இவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வரை கரோனா தொற்றின் காரணமாக பார் அசோசியேஷன் தேர்தல் நடைபெறாததால் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
இதனிடையே உச்சநீதிமன்ற பார் அசோசியேஷனின் செயற்குழு உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான சந்தர் உதய் சிங்கும் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.