பொதுமக்களுடன் பொங்கல் விழா கொண்டாடிய முதல்வர்

உழவர் திருநளையொட்டி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி , வியாழக்கிழமை தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் அருகே முருகன் ஆலயத்தில் பொதுமக்களுடன் சாமி தரிசனம் செய்தார்.
பொதுமக்களுடன் பொங்கல் விழா கொண்டாடிய முதல்வர்
பொதுமக்களுடன் பொங்கல் விழா கொண்டாடிய முதல்வர்

உழவர் திருநளையொட்டி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி , வியாழக்கிழமை தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் அருகே முருகன் ஆலயத்தில் பொதுமக்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம், கமாலாபுரம் சென்ற அவர் அங்கிருந்து சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு வருகை புரிந்தார்.

அவரது வீட்டின் அருகே உள்ள முருகன் கோயில் திடலில் நடைபெறும் பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு வழிபாடு செய்தார்.

பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புடன், பொங்கல் மற்றும் கரும்பு வழங்கினார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி சிலுவம்பாளையம் பகுதியில் நடைபெறும் கிராமிய கலைநிகழ்ச்சிகளை கண்டு மக்களை சந்தித்து உரையாடவும் முதல்வர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com