தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தில்லி காவல்துறை கூறியதாவது,
தில்லி அப்துல் கலாம் சாலையில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை மாலை 5.05 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 கார்கள் சேதமடைந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் யாரும் காயமடையவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த சாலை மூடப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சோதனை செய்து வருகின்றனர்.