மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை உரையாற்றுகையில், "ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு விலையில்லாமல் தடுப்பூசி விநியோகிக்கப்படும்" என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது:
மத்திய அரசு 75 சதவீத தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். தடுப்பூசி கொள்கையில் முந்தைய நிலையை மாற்றிக் கொண்டதற்கு பிரதமருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தடுப்பூசி பதிவு, சான்று தரும் நடைமுறை போன்றவற்றை மாநிலங்களிடம் விட்டுவிட வேண்டும்.