உத்தரப் பிரதேசத்தில் பொதுமுடக்கத்திற்கு பிறகு மீண்டும் மெட்ரோ ரயில் சேவை புதன்கிழமை தொடங்கியது.
கரோனா இரண்டாம் அலை காரணமாக மெட்ரோ ரயில் சேவையை உத்தரப் பிரதேச அரசு கடந்த 39 நாள்களுக்கு முன்பு நிறுத்தியது.
தற்போது கரோனா பரவல் குறைந்ததையடுத்து மாநிலம் முழுவதும் பொதுமுடக்கத்தை தளர்த்தியுள்ள நிலையில், சமூக இடைவெளியுடன் மெட்ரோ ரயில்கள் இன்று மீண்டும் இயக்கப்பட்டது.