முன்களப் பணியாளர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் தேவை: மத்திய அரசு

முன்களப் பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராகேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் (கோப்புப்படம்)
மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் (கோப்புப்படம்)

முன்களப் பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராகேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடனும், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், மாநிலங்களில் தேசிய தடுப்பூசி கொள்கையை முறையாக பின்பற்றி தடுப்பூசி போடப்படுகிறதா என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

ஆலோனைக் கூட்டத்தில் பேசிய ராஜேஷ் பூஷண், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com