புதுவையில் இன்று 429 பேருக்கு கரோனா

புதுச்சேரியில் புதிதாக 429 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக வெள்ளிக்கிழமை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுவையில் இன்று 429 பேருக்கு கரோனா

புதுச்சேரியில் புதிதாக 429 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக வெள்ளிக்கிழமை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, புதுவையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,11,684ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 11 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,668ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 1,03,860 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com