தில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
கரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில் இந்த சந்திப்பானது நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பின் போது, மாநிலத்திற்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகள், மாநில வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற வாய்ப்புள்ளது.
மேலும், நாளை மறுநாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.