நீர்நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு பெரும்பள்ள ஓடையின் இருபுறங்களிலும் கான்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்திற்கு தடை கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது,
நீர் நிலைகளில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. நீர் நிலைகளை சிதைக்காமல் காக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய 3 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.