தமிழகத்திற்கு கரோனா தடுப்பூசி தேவையானது 11.30 கோடியாக உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது,
மாநிலத்தின் தற்போதைய தடுப்பூசி தேவையாது 11.30 கோடியாக உள்ளது. தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலை ஏற்பட்டாலும் அதை தடுக்கும் அளவிற்கு அனைத்து நடவடிக்களும் எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் 2,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.