‘மத்திய அரசு அனுமதித்ததும் மேக்கேதாட்டு கட்டுமானப் பணிகள்’: எடியூரப்பா சர்ச்சை பேச்சு

மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மேக்கேதாட்டு அணை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மேக்கேதாட்டு அணை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணிக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பிரதமர் மோடியை வியாழக்கிழமை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என மனு அளித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடன் மேக்கேதாட்டு அணை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,

மேக்கேதாட்டு அணை கட்டுமானம் கர்நாடகாவின் மிக முக்கியமான திட்டமாகும். இத்திட்டத்தை எதிர்த்து தமிழக அரசால் அளித்த கோரிக்கையை பசுமைத் தீர்ப்பாயம் முடித்து வைத்துள்ளது. 

இதையடுத்து மத்திய அரசின் அனுமதி வந்தவுடன் மேக்கேதாட்டு அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com