தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் தேதி முதல் நடைபெறும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
நிகழ்வாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் நடத்தி வருகின்றன. இந்நிலையில் தில்லி மாநில பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட செய்தியில்,
மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் தேதி முதல் மார்ச் 16ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.