மேற்குவங்க தேர்தல்: தேர்வுக் குழு அமைத்தது காங்கிரஸ்

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வுக் குழு செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க தேர்தல்: தேர்வுக் குழு அமைத்தது காங்கிரஸ்
மேற்குவங்க தேர்தல்: தேர்வுக் குழு அமைத்தது காங்கிரஸ்

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வுக் குழு செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இதில், காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 92 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

அந்தக் குழுவின் தலைவராக ஜே.பி.அகர்வால், உறுப்பினர்களாக டாக்டர்.மகேஷ் ஜோஷி, நசிம் கான், ஜிதின் பிரசாத், அதிர் ரஞ்சன் செளதரி, அப்துல் மன்னன் மற்றும் மேற்குவங்க காங்கிரஸ் பொறுப்பாளர்களை நியமித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com