மேற்குவங்கத்தில் உள்ள திரைக்கலைஞர்கள் சிலர் திரிணமூல் காங்கிரஸில் வியாழக்கிழமை இணைந்தனர்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், பல பிரபலங்கள் அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் மற்றும் இயக்குனருமான தீராஜ் பண்டித், நடிகர் சுபத்ரா முகர்ஜி, பின்னணி பாடகர் அதீதி முன்ஸி மற்றும் பாஜகவின் உஷா செளத்ரி ஆகியோர் இன்று திரிணமூலில் இணைந்துள்ளனர்.