தமிழகத்தில் ராகுல் பிரசாரத்திற்கு தடை கோரி பாஜக கடிதம்

தமிழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரி பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்  (கோப்புப்படம்)
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் (கோப்புப்படம்)

தமிழகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரி பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு எல்.முருகன் எழுதிய கடிதத்தில்,

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். மேலும், அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து ராகுல் காந்தி தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com