நாட்டில் இதுவரை 1.77 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இன்று (வியாழக்கிழமை) மட்டும் மாலை 7 மணி வரை 10,93,954 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,77,11,287 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை ஊழியர்கள் முதல் டோஸ் | சுகாதாரத்துறை ஊழியர்கள் இரண்டாம் டோஸ் | முன்களப்பணியாளர்கள் முதல் டோஸ் | முன்களப்பணியாளர்கள் இரண்டாம் டோஸ் | 60 வயதுக்கு மேற்பட்டோர் முதல் டோஸ் | 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் இரண்டாம் டோஸ் | மொத்தம் | |
மொத்த எண்ணிக்கை (48 நாள்கள்) | 68,38,077 | 30,82,942 | 60,22,136 | 54,177 | 14,95,016 | 2,18,939 | 1,77,11,287 |
இன்று | 47,137 | 2,09,838 | 2,17,858 | 49,975 | 4,93,999 | 75,147 | 10,93,954 |
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மாற்றும் மார்ச் 1ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடங்கியது.