பாஜக ஆட்சியில் தான் அசாமின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று மாநில பாஜக தலைவர் ரஞ்சித் குமார் தாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மார்ச் 27 முதல் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு நிலவரம் குறித்து மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஞ்சித் கூறியதாவது,
பாஜக, ஏஜிபி மற்றும் யுயுபிஎல் கட்சிகளுடன் 86 தொகுதிகள் பங்கீடு குறித்து நேற்று விவாதிக்கப்பட்டது. விரைவில் முடிவு வெளியிடப்படும்.
மேலும், அசாமில் பாஜக மேற்கொண்ட பணிகளின் அடிப்படையில், நாங்கள் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம். பாஜக ஆட்சியில் உள்கட்டமைப்பு மேம்படுத்தியது ஒரு அடையாளமாக இருக்கிறது.
கடந்த 60 ஆண்டுகளில் 6 மருத்துவமனைகளை மட்டுமே காங்கிரஸ் கட்டியுள்ளது. ஆனால், பாஜக கடந்த 5 ஆண்டுகளில் எய்ம்ஸ் உள்பட 11 மருத்துவமனைகளை உருவாக்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.