தற்போதைய செய்திகள்
மேலும் ஒரு திரிணமூல் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார்
மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் மேலும் ஒரு திரிணமூல் எம்எல்ஏ பாஜகவில் இணைந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் மேலும் ஒரு திரிணமூல் எம்எல்ஏ பாஜகவில் இணைந்துள்ளார்.
மேற்கு வங்க பேரவைத் தேர்தலுக்கான திரிணமூல் வேட்பாளர் பட்டியல் மார்ச் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் திரிணமூல் எம்எல்ஏ கெளரிசங்கர் துத்தா பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதைத் தொடர்ந்து, அவர் வியாழக்கிழமை பாஜகவில் இணைந்தார்.
இந்தவார தொடக்கத்தில், திரிணமூலின் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில் மார்ச் 27 தொடங்கி, ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.