மேலும் ஓர் திரிணமூல் எம்எல்ஏ ராஜிநாமா

திரிணமூல் காங்கிரஸின் மேலும் ஓர் சட்டப்பேரவை உறுப்பினர் திங்கள்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

திரிணமூல் காங்கிரஸின் மேலும் ஓர் சட்டப்பேரவை உறுப்பினர் திங்கள்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வாரம் திரிணமூல் காங்கிரஸின் வேட்பாளர்கள் பட்டியலை மம்தா பானர்ஜி அறிவித்தார். இதில், மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால்,  எம்எல்ஏ தேபஸ்ரீ ராய் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

கடந்த வாரம் சில திரிணமூல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com